அனர்த்த முகாமைத்துவ துறையில் ஈடுபட்டுள்ள தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் ஒன்றிணைந்து சர்வதேச மட்டத்தில் மாநாடொன்றினை 2020.03.16 – 2020.03.18 ஆம் திகதிகளில் கொழும்பில் நடாத்துவதற்கு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளன.
இந்த சர்வதேச மாநாட்டின் ஓர் செயற்பாடாக பாடசாலை மணவர்களின் அனர்த்த் முகாமைத்துவ செயற்பாடுகள் பற்றிய அறிவு மற்றும் அவதானிப்புக்களை மேம்படுத்துவதற்காகவும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்பைப் பெற்றுக் கொள்வதற்காகவும் நாடளாவிய ரீதியில் சித்திரப் போட்டியொன்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் கல்வி அமைச்சின் பங்களிப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது.